நெடுந்தீவில் ஆர்ப்பாட்டம்!


நெடுந்தீவில் அமைக்கப்பட்டுவரும் கொங்கிறீற் வீதிகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.நெடுந்தீவில் அமைக்கப்பட்டுவரும் கொங்கிறீற் வீதிகளினால் விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவித்தே இக்கண்டன ஆர்ப்பாட்டம் கிராமமக்களால் நடத்தப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் வீடுகளிற்கான எல்லை மதில்கள் முருகைகற்களை கொண்டே அமைக்கப்பட்டுவருகின்றது.அதே போன்று இதுவரை தார் வீதிகளே அமைக்கப்பட்டுமுள்ளது.

இந்நிலையில் ஊழல் நோக்கத்துடன் குறித்த வீதிகள் அமைக்கப்படுவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

No comments