திண்ணையில் மாவை இரகசிய சந்திப்பு !


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் தூதுவரால இராஜதந்திரி ஒருவர் விருந்தினர் விடுதி ஒன்றில் இரகசிய அரசியல் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த இராஜதந்திரி இன்று நண்பகல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள திண்ணை விருந்தினர் தங்ககத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜ, யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் குமாரவடிவேல் குருபரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களை தனித்தனியாக அழைத்து சந்திப்புக்களை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

மாவை சேனாதிராஜவுடனான சந்திப்பின் போது மாவை சேனாதிராஜா பிரிட்டன் இராஜதந்திரி கூறுபவற்றிக்கு தலையாட்டிக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாகவும் குருபரனுடனான சந்திப்பின்போது இருவரும் காரசாரமாக உரையாடியதாகவும் சம்பவத்தை நேரில் அவதானித்த ஒருவர் எம்முடன் பகிர்ந்திரந்தார்.

எனினும் ஏனையவர்கள் யார் யாரைச் சந்தித்தார் என்றும் என்ன விடையங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன என்ற விபரங்களும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

No comments