வீதிக்கு இறக்கப்பட்ட கர்ப்பிணிகள்?


அரசின் முக்கிய ஆதரவாளரான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் ஏற்பாட்டில் மகப்பேற்று வைத்தியரைக்கோரி கண்டணப் பேரணியொன்று கிளிநொச்சியில் நடத்தப்பட்டுள்ளது.

வைத்திய நிபுணர் வெளிநாட்டுப் பயிற்சியை முடித்துவிட்டு வந்துள்ளநிலையில் அவரை கிளிநொச்சிக்கு அழைத்துவர  அழுத்தம் கொடுக்க குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அவர் வேறு இடத்துக்கு அனுப்பப்படும் பட்சத்தில் இன்னும் சில மாதங்களுக்கு வைத்திய நிபுணர் கிளிநொச்சிக்கு வருவதே சாத்தியமில்லையென சொல்லப்படுகின்றது.

இன்றைய தினம் மாதாந்த கிளினிக் நடைபெற்ற நிலையில் அதில் பங்கெடுக்க வந்திருந்த கர்ப்பிணிகள் சகிதம் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.
அரசின் பங்காளியாக கூட்டமைப்பினர் உள்ள நிலையில் அரச அமைச்சருடன் பேசி தீர்க்கவேண்டிய விடயத்தை கர்ப்பிணிகளை வீதியில் இறக்கி போராடுவது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

No comments