பண்ணைக் கடலில் யாழ் போதனாவைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள்


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை உரிய நியமங்களுக்கமைய சுத்திகரிக்காமல் குடாக்கடலில் கலக்க விடுதல் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ரி.சத்தியமூர்த்தி  ஆராய்ந்து நடவடிக்கை  எடுத்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற மாநகர சபை அமர்வில் மாநகர சபை உறுப்பினர் மகாலிங்கம் அருள்குமரனினால்  முன்வைக்கப்பட்ட இம் முறைப்பாடு தொடர்பில் ஆராயும் முகமாக இன்று(22) குறித்த பகுதிக்கு சென்று வைத்தியசாலை பணிப்பாளர் ஆராய்ந்துள்ளார்.

 இதன் போது  குறித்த வைத்தியசாலையிலிருந்து யாழ். பண்ணைப்பகுதியில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படும் கழிவு நீர் உரிய நியமங்களுக்கு அமைய சுத்திகரிக்கப்படுவதில்லை  என்பதை உறுதிப்படுத்தியதோடு விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இதன் போது மாநகர சபை உறுப்பினர்களான மகாலிங்கம் அருள்குமரன் மற்றும்  லோக தயாளன் ஆகியோர் வைத்தியசாலை பணிப்பாளருடன் சென்றிருந்தனர்.

No comments