மாளிகாவத்தை துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி


கொழும்பு, மாளிகாவத்தை ஜூம்மா சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (26) மாலை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்ணை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அப்பெண் உயிரிழந்துள்ளார்.

No comments