வடமராட்சி கிழக்கில் மீண்டும் படகு தீ வைப்பு! படகு சாம்பலானது!

வடமராட்சி கிழக்கு தாளையடியில் மீண்டும் படகு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இனம் தெரியாத விசமிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடல் தொழிலையே நம்பி வாழும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் படகே எரியூட்டப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது.

இது தொடர்பாக பளை காவல் நிலையத்தில் முறையிடப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

No comments