இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின்!

இலங்கை ஜனாதிபதியின் முன்னாள் செயலாளரும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஆளுநராக இருந்தவருமான ஒஸ்ரின் பெர்னாண்டோ, இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இவர் இப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒஸ்ரின் பெர்னாண்டோ, அமைச்சுகள் உள்ளிட்ட அரச நிர்வாகத்துறையில் பல பதவிகளை வகித்தவர்.

எனினும் ஜனாதிபதி செயலகத்தில் தனக்கான கௌரவம் வழங்கப்பட்டிருக்கவில்லையென தனது பதவியினை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments