பிரான்சு சார்சல் பகுதியில் எழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் இறுதிப் போட்டிகள்!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 25 ஆவது வருடமாக  நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டி 2018 இன் இறுதிப்போட்டிகள் பிரான்சு
சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் கடந்த (15.07.2018) ஞாயிற்றுக்கிழமை உலகக்கிண்ண இறுதிப்போட்டிநாளன்று மிகவும் விறுவிறுப்போடு நடைபெற்று முடிந்தது.

கடந்த (07.07.2018) சனிக்கிழமை, கடந்த (08.07.2018) ஞாயிற்றுக்கிழமை மற்றும் (14.07.2018) சனிக்கிழமை ஆகியதினங்களில் தெரிவு மற்றும் இறுதிப்போட்டிகள் இடம்பெற்ற நிலையில்  கடந்த 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டிகள் இடம்பெற்றிருந்தன.

அன்றையதினம் சார்சல் நெல்சன் மண்டேலா மைதானப் பகுதியில் அமைந்துள்ள நினைவுத்தூபி முன்பாக காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற ஆரம்ப வணக்க நிகழ்வில் ஈகைச்சுடர்ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து பான்ட் தாளவாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்;து வரப்பட்டதைத் தொடர்ந்து, பொதுச்சுடரினை  தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினரான திரு.ஆறுமுகதாஸ் அவர்கள் ஏற்றிவைக்க பிரெஞ்சுக்கொடியை தமிழ்ச்சோலைத் தலைமைப்பணிமனை பொறுப்பாளர் திரு.ஜெயக்குமாரன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு.கிருபா அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை 30.03.2000 அன்று கிளிநொச்சி பளைப் பகுதியில் ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையின் போது வீரச்சாவடைந்த மாவீரர் கப்டன் ராகுலன் அவர்களின் சகோதரன் அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

ஒலிப்பிக் தீபத்தை மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம் அவர்கள் மெய்வல்லுநர் போட்டித் தலைவன் திரு.அருமைத்துரை சிறிநிவாஸ் மற்றும் மெய்வல்லுநர் தலைவி மகேந்திரன் லிஷா ஆகியோரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து வீரர்கள், நடுவர்கள் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றதையடுத்து போட்டிகள் ஆரம்பமாகின.

தமிழர் வி.க. 93, தமிழர் வி.க. 94, தமிழர் வி.க.95, யாழ்டன் வி.க., நல்லூர்ஸ்தான் வி.க., அரியாலை ஐக்கிய கழகம் ஆகிய கழகங்களிடையே விறுவிறுப்பாக போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
25 வருடங்களாக பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையினரால் நடாத்தப்பட்டுவரும் இந்த விளையாட்டுப் போட்டிகள் திறம்பட நடைபெறுவதற்கு அயராது உழைத்துவரும் தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்கள், நீதிதவறாத நடுவர்கள் உணர்வுபூர்வமான அறிவிப்புடன் உற்சாகமான கரகோசத்துடன் அழைத்துவரப்பட்டமை மெய்சிலிர்க்கவைத்தது.

தொடர்ந்து கழக வீரர்களின் அணிவகுப்பு சிறப்பாக அமைந்திருந்தது. அணிவகுப்பு மரியாதையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேஸ், தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினரும் உதவிப்போட்டி முகாமையாளர் திரு.பீலிக்ஸ், பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்ட மாவீரர் கப்டன் ராகுலன் அவர்களின் சகோதரன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் துணைப்பொறுப்பாளர் திரு.பாக்கியநாதன் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். 

மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப்போட்டிகளின் இறுதிப்போட்டிகளும் கரப்பந்தாட்டப்போட்டிகளின் செற்றப் போட்டிகளும் இடம்பெற்றிருந்தன.

அணிவகுப்பில் யாழ்ட்டன் வி.க. முதலிடத்தையும் நல்லூ;ர்ஸ்தான் வி.க. இரண்டாமிடத்தையும் தமிழர் வி.க. 94 மூன்றாம் இடத்தையும் தமதாக்கிக்கொண்டன.

ஆண்கள் உதைபந்தாட்டப் போட்டிகளில் யாழ்ட்டன் வி.க. முதலிடத்தையும் நல்லுஸ்ர் ஸ்தான் வி.க. இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

13 வயதின் கீழ் ஆண்கள் உதைபந்தாட்டப் போட்டிகளில் யாழ்ட்டன் வி.க. முதலிடத்தையும் அக்கினி வி.க. இரண்டாமிடத்தையும் தமிழர் வி;க. 93 மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

15 வயதின் கீழ் ஆண்கள் உதைபந்தாட்டப் போட்டிகளில் தமிழர் வி;க. 93 முதலிடத்தையும் நல்லூர்ஸ்தான் வி.க. இரண்டாமிடத்தையும், யாழ்ட்டன் வி;க.  மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.
பெண்கள் உதைபந்தாட்டப் போட்டிகளில் நல்லுஸ்ர் ஸ்தான் வி.க. முதலிடத்தையும் தமிழர் வி.க. 93  இரண்டாமிடத்தையும்  யாழ்ட்டன் வி.க. மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

கரப்பந்தாட்டம் போட்டிகளில் தமிழ் இளைஞர் வி.க. 94  முதலிடத்தையும் யாழ்ட்டன் வி.க. இரண்டாம் இடத்தையும் அரியாலை வி.க. மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

சிறப்புரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்கள் ஆற்றியிருந்தார்.

இந்நிகழ்வில் உதவிப் போட்டி முகாமையாளரும் பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை முக்கிய உறுப்பினருமான திரு.பீலிக்ஸ் அவர்கள் அவரது அயராத பணிகாரணமாக மதிப்பளிக்கப்பட்டார். அவருடைய வயதனையே கருதாத அவரது பணிகுறித்து செயற்பாட்டாளர்கள் சிறப்புரை வழங்கியிருந்ததுடன் சிறப்புக்கேடயமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து திரு.பீலிக்ஸ் அவர்கள் தெரிவிக்கையில், நான் இங்குவந்த காலத்தில் இருந்து இன்றுவரை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் வழிகாட்டலில் அவர்களின் கட்டளையின்படி நடந்து வருகின்றேன்.  தொடர்ந்தும் பயணிப்பேன் என மகிழ்ச்சியோடு தெரிவித்தார். 

தொடர்ந்து வெற்றிபெற்ற கழகங்களுக்கும் வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணமும் பதக்கமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.

நிகழ்வின் ஆரம்பம் முதல் இறுதிவரை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்களும் திருமதி கவிதா கஜேந்திரன், திருமதி இராசநாயகம் ஆகியோர் நிகழ்வினைத் தமது அறிவிப்பின் ஊடாகக் கொண்டுசென்றிருந்தனர்.
நிகழ்வின் நடுவே உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு மக்களை இவர்கள் உற்சாகப்படுத்தியிருந்தனர்.

தடகளவிளையாட்டு, மற்றும் அனைத்து விளையாட்டுக்கள் என்ற அடிப்படையில் இரண்டு சுற்றுக் கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அனைத்து விளையாட்டுக்களின் புள்ளிகளின் அடிப்படையில்  முதல் இடத்தை யாழ்ட்டன் விளையாட்டுக்கழகமும் இரண்டாமிடத்தை நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகமும் மூன்றாம் இடத்தை தமிழர் விளையாட்டுக்கழகம் 93 உம் பெற்றுக்கொண்டன.

தடகள விளையாட்டுக்களின் புள்ளிகளின் அடிப்படையில்  முதல் இடத்தை நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகமும் இரண்டாமிடத்தை யாழ்ட்டன்  விளையாட்டுக்கழகமும் மூன்றாம் இடத்தை தமிழர் விளையாட்டுக்கழகம் 93 உம் பெற்றுக்கொண்டன.

கொடிகள் இறக்கப்பட்டதைத் தொடர்ந்து நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வுகள் நிறைவுகண்டன.

No comments