நீதிமன்றத் தீர்ப்பை அமுல்ப்படுத்தினால் வடக்கு பிரச்சனை தீர்ந்துவிடுமாம்


நீதிமன்ற தீர்ப்பை உரிய முறையில் பின்பற்றினால் வட மாகாண சபையில் எவ்வித குழப்பங்களும் இடம்பெற மாட்டாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று  ஊடகவியலாளர்கள் சிலரைச் சந்தித்தபோதே அவர் இதனைக் கூறினார்.

நீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளையில் எவ்வித குழப்பமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

நீதிமன்ற கட்டளையை சரியாக அமுல்படுத்தினால் எவ்வித குழப்பமும் இன்றி சுமுகமாக மாகாண ஆட்சி நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த தீர்ப்பில் தௌிவின்றி இருப்பதாக வேண்டுமென்றே பாசாங்கு காட்டிக் கொண்டு அமுல்படுத்தாமல் இருப்பதுதான் குழப்பநிலைக்கு காரணமாக இருக்கின்றது என்று எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

No comments