அனந்தியிடமும் நவீன பிஸ்டல்!

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சரும் முன்னாள் அரசியல்துறை போராளியுமான எழிலனின் மனைவியுமான அனந்தி, தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து கைத்துப்பாக்கி பெற்று வைத்துள்ளதாக மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் விடயத்தை முன்னிறுத்தி இன்று கூடிய வடமாகாணசபை அமர்வில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எவரும் கூட்டத்தில் பங்கெடுக்காது புறக்கணித்துவிட்டனர்.

இந்நிலையில் அங்கு கருத்து தெரிவித்த அஸ்மின் அனந்தியிடம் தற்போது கைத்துப்பாக்கி இருப்பதாக தெரிவித்தார்.

ஏற்கனவே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபுறம் விசேட அதிரடிப்படை பாதுகாப்புடன் இரகசியமாக பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கியும் பெற்று வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே காவல்துறை பாதுகாப்பினை பெற்றுள்ள அனந்தி கைத்துப்பாக்கியும் வைத்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

இதனிடையே தனது அயல் கிராமமான சுழிபுரத்தில் ரெஜினா எனும் சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தினையடுத்து அங்கு செல்ல தனக்கு பாதுகாப்பில்லையென அனந்தி மறுதலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments