துருக்கியில் தொடருந்து விபத்து! 24 பயணிகள் பலி!


பல்கேரியா நாட்டிலிருந்து துருக்கி நோக்கி இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட பயணிகள் தொடருந்து தடம் புரண்டதில் 24 பயணிகள் பலியாகியுள்ளனர்.

பல்கேரியா நாட்டின் கபிகுல் பகுதியில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு 360 பயணிகளுடன் தொடருந்து புறப்பட்டது.

குறித்த தொடருந்து துருக்கி தெகிர்டாக் பகுதியில் வரும் போது பயணிகள் தொடருந்தின் ஆறு பெட்டிகள் திடீரென தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 10 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், காயமடைந்தவர்களில் மேலும் சிலர் உயிரிந்துள்ளனர்.  தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.



No comments