பாரவூர்த்தி - சிற்றூர்தி விபத்து! இருவர் பலி!

தெற்கு அதிவேக வீதியில் இன்று அதிகாலை 5.00 மணியளவில்  இடம்பெற்ற விபத்தில்  அவுஸ்திரேலிய நாட்டுப் பிரஜை ஒருவரும் 4 வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிலுள்ள குருந்துகஹஹெதெக்ம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீதியின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றின் பின் பக்கத்தில் மோதியதனால் சிற்றூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சிற்றூர்த்தியில் பயணித்த அவுஸ்திரேலிய பிரஜைகள் நான்கு பேர் காயமடைந்து களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  விபத்து தொடர்பாக எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

No comments