ஆளுநரின் இணைப்பாளரானார் டிவகலாலா!


வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளர் சுந்தரம் டிவகலாலா இன்று (16) காலை நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தினை ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார்.

இதுவரை காலமும் இணைப்புச் செயலாளராக கடமை ஆற்றிய சுமணபால ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில் இணைப்புச் செயலாளராக தமிழரான சுந்தரம் டிவகல்லாலா நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கில் தனது ஓய்வுகாலத்தில் ஆறுதல் எனும் தொண்டு நிறுவனத்தை அவர் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

No comments