வடமாகாணத்தில் 28 முதல் மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தம்!


வைத்தியர்களுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படாத பட்சத்தில் எதிர்வரும் 28ம் திகதி முதல் தொடர்  வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வடமாகாண ஆளுநர் றெஜினோல் குரேக்கும் வடமாகாண அரச வைத்திய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, வடமாகாண சபை அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயற்பாடுகளால் தாம் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் அதனால் வைத்தியர்கள் உட்பட பல அரச அலுவலர்கள் தமது நிலுவைகளைப் பெற பல ஆண்டுகளாக காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் வைத்தியர் சங்கத்தினர் ஆளுநரிடம் எடுத்துக் கூறினர்.

இந்நிலையில், உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படாத பட்சத்தில் எதிர்வரும் 28ம் திகதி முதல் தொடர்  வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

No comments