ரணில் இரவு விருந்துக்கு சென்ற ஹோட்டலை நோக்கி கல்வீச்சு?


யாழ். விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,நேற்று இரவு விருந்துக்காகச் சென்ற ஹோட்டலின் வெளிப்புறத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினருக்கு நேற்று இரவு விருந்து யூஎஸ் ஹோட்டலில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இன் நிலையில் இரவு 9.45 மணியளவில் யாழ்ப்பாண நகரத்தில் மின் தடை ஏற்பட்டது. குறித்த நேரத்தில் யூஎஸ் ஹோட்டலுக்கு வெளிப்புறத்தில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல் வீச்சை மேற்கொண்டோர் தப்பி ஓடிவிட்டதாகவும், சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். என்றாலும் ஹோட்டல் மீது எந்த கல்வீச்சுத் தாக்குதலும் இடம்பெறவில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments