தொடரூந்து போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படக் கூடும்


இன்று பிற்பகல் 4.00 மணி முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொடரூந்து தொழில்நுட்பவியலாளர்கள் தொழிற்சங்க குழு தெரிவித்துள்ளது.

அந்த குழுவின் தலைவர் சம்பத் ராஜித்த இதனை தெரிவித்துள்ளார்.

தொடரூந்து சேவையில் சில தரங்களுக்கு உயர்த்தப்பட்ட வேதன அதிகரிப்புக்கு இணையாக ஏனையவர்களுக்கும் வேதன அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியே இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் காரணமக தொடரூந்து போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments