கிளிநொச்சியில் கோர விபத்து! ஸ்தலத்திலேயே பலியான சாரதி


கிளிநொச்சி - ஏ35 வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி ஒன்றும், டிப்பர் ரக வாகனமும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் முச்சக்கரவண்டியை ஓட்டிச்சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இவருடைய சடலம் நீண்ட நேரத்திற்கு பின்னரே எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அளவுக்கு முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்திருப்பதாகவும் செய்தியாளர் குறிப்பிட்டார்.



இதேவேளை, டிப்பர் வாகனத்தை ஜீப் வாகனம் ஒன்று முந்திச் செல்ல முற்பட்டுள்ளதுடன், டிப்பர் வாகனத்தின் பின்னால் மோதியுள்ளது. இதையடுத்து குறித்த டிப்பர் வாகனம் முன்னால் வந்த முச்சக்கர வண்டியை மோதியுள்ளது.

இதில் மூன்று வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த முச்சக்கரவண்டி குறித்த டிப்பர் வாகனத்தின் கீழ் சென்று இறுகியுள்ளதுடன், முச்சக்கரவண்டியை கடும் சிரமத்தின் மத்தியில் நீண்ட நேரம் கழித்தே வெளியில் எடுத்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

No comments