தூத்துக்குடி விவகாரம்: யாழ்.பல்கலைக்கழகமும் கண்டனம்!

தூத்துக்குடி படுகொலையினை கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவ சமூகம் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடத்தியுள்ளனர். பல்கலைக்கழக முன்வீதியில் மாணவர்கள் ஒன்று திரண்டு இன்று நண்பகல் 12 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருநதனர்.
தமிழகம் தூத்துக்குடியில் ஸ்ரெர்லைட் ஆலையை மூட வலியுறத்தி மக்களால் நடத்தப்படும் மாபெரும் போராட்டத்தின நூறாவது நாளான கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது தமிழக காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவி உள்பட 12 பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர்.
இதற்கு தமது கண்டனத்தை வெளிப்படுத்தியே மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.





No comments