பொலிஸ் மா அதிபரின் எதிர்ப்புக்கு மத்தியில் பதவியுயர்வு


கிளிநொச்சி கோட்டத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்தன பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தப் பதவி உயர்வை அவருக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிவர்தனவுக்கு பதவியுயர்வு வழங்குவதை பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் எதிர்த்து வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

No comments