பிரித்தானியாவில் தமிழர்களிடையே நடைபெற்ற உதைபந்தாட்டப்போட்டி

தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரித்தானியா விளையாட்டுத்துறை ஏற்பாட்டில்  தமிழர் புனர்வாழ்வு கழக உதைபந்தாட்ட சுற்று போட்டி நேற்று (27.05.18) காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிவரை மோடன்  பகுதியில்  இடம்பெற்றது.

தேசியக் கொடியேற்றலுடன் போட்டிகள்யாவும் ஆரம்பமாயின.
சுமார் 60 அணிகள் போட்டியில் பங்கு பெற்றிஇருந்தார்கள். 9 வயதிற்கு உட்பட்டவர்கள் தொடக்கம் 40 வயதிற்கு மேற்பட்ட அணிகள் என பல அணிகள் மோதி வெற்றி கேடயங்களை பெற்றார்கள்.

கோனிபா  உதைபந்தாட்ட போட்டியில் பங்கு கொள்ள இருக்கும் தமிழீழம் அணியினரின் காட்சிப்போட்டியும் இடம்பெற்றது.

நிறைவாக தேசிய கொடிகள் கையேந்தலுடன் தொடர்ந்தும் பயணிப்போம் என்ற உறுதி மொழியோடு உதைபந்தாட்ட போட்டி நிறைவு பெற்றது.

No comments