மெரீனா கடற்கரையில் நடைபெறவுள்ள தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல்!


தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை நினைவு கூறும் வகையில் இந்த ஆண்டும் சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி  சிலையருகே மே 20 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 4 மணியளவில் மெழுகுவத்தி  ஏந்தி    நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும். இந்த நினைவேந்தல் நிகழ்வின் கோரிக்கை மற்றும் நிகழ்ச்சியினைப்  பற்றிய  விளக்கங்களை மக்களிடத்தில் சேர்ப்பதற்கான பத்திரிகையாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன் காந்தி மற்றும் மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, எஸ்.டி.பி.ஐ மாநிலத்தலைவர் தெகலான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது உள்ளிட்டபல்வேறு கட்சி இயக்க தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் தாங்களும் கலந்துகொண்டு வரலாற்று  முக்கியத்துவம் வாய்ந்த இந்நினைவேந்தல் குறித்த செய்திகளை மக்களிடம் சேர்க்க உதவுமாறு வேண்டுகிறோம்.


Place: Madras Reporters Guild, Chennai.
Date : 13-05-2018, Sunday ,Morning 11 AM

No comments