மட்டக்களப்பில் பெண்ணின் சடலம் மீட்பு!

 ஏறாவூர் வந்தாறுமூலையில் வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டது சடலம் வந்தாறுமூலை விஷ்ணு கோவில் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து 24 வயதான அழகரத்தினம் டிசாந்தினி என இனம் காணப்பட்டது.

குறித்த சடலம் வீட்டின் வாசல்  கதவருகே மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போது வீட்டில் பெண்ணின்  31  வயதான கணவனும், ஒரு வயது குழந்தையும் வீட்டில் இல்லை எனவும்  கூறப்படுகின்றது.

காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments