சந்திரகுமாரிற்கு போட்டி: கிளிநொச்சியில் சிறீதரன் பார்?

தனது போட்டி அரசியலாளரான சந்திரகுமாரிற்கு இணையாக தனது சாம்ராஜ்ஜியத்தை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்டியெழுப்பிவருகின்றார். அவ்வகையில் சட்டவிரோத மது, கஞ்சா, கசிப்பு பாவனையை கட்டுப்படுத்த, கிளிநொச்சியில் சட்டபூர்வமான மதுபானசாலைகளை திறக்க வேண்டுமென கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேற்று இட்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தெரிவித்திருந்தது உள்நோக்கங்கொண்டதென நெருங்கிய ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காலத்தில் பலம் வாய்ந்தவராக இருந்த சந்திரகுமார் கிடைத்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி மதுபான சாலை பெமிட்களை பெற்று தலா 80 இலட்சம் படி விற்றிருந்தார். அதில் ஒன்றினை தனது மைத்துனரும் எழுத்தாளருமான நபர் ஒருவரது பெயரில் யாழ்ப்பாணத்தில் பேணி வருகின்றார். இதன் மூலம் மாதாந்தம் மில்லியன்களில் வருமானத்தை ஈட்டியும் வருகின்றார்.

இந்நிலையில் தற்போதைய அரசின் நெருங்கிய சகபாடியான சி.சிறீதரன் வசம் அமைச்சர்கள் உறவு பலமாக உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பல மதுபானசாலைகள் உள்ளன. கிளிநொச்சியில் ஒன்றுகூட இல்லை. எனவே கிளிநொச்சிக்கு மதுபானசாலை வேண்டுமென வலியுறுத்தி மதுபானசாலையினை வழமை போல தனது பினாமிகள் பெயரில் திறக்க அவர் முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments