திருகோணமலையில் வரிச்சீருடை மற்றும் வெடிபொருட்கள் மீட்பு!

திருகோணமலை, கோமரங்கடவெல காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட புலிக்கண்டி குளம் பகுதியிலுள்ள காட்டுக்குள் வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளனவென, கோமரங்கடவெல காவல்துறையினர் தெரிவித்தனர்.

காட்டுக்குள் விறகு எடுப்பதற்காகச் சென்ற நபர்கள் வழங்கிய தகவலையடுத்து, இந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை இரண்டு உட்பட 16 வெடிபொருட்கள், பெரிய பெட்ரி சாஜர், மல்டி பிளக், 4 அடி நீளமான கோட் வயர்  ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments