முள்ளிவாய்க்கால் குறியீடாக பேர்லினில் வேர்விடும் ஆப்பிள் மரம்

 முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில்  புகழ்பெற்ற Britzer Garten வளாகத்தில்  2012 ஆண்டு நடப்பட்ட ஆப்பிள் மரத்தை நேற்றைய தினம் தமிழ் உறவுகள் பார்வையிட சென்று வணக்கம் செலுத்தினர். எப்படி அந்த ஆப்பிள் மரம் தனது வேர்களை ஆழமாக மண்ணில் பரப்பி நிலைத்திருக்குமோ அப்படி முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவுகளும் எமது நெஞ்சங்களில் அழியாது நினைவுகளாக இருக்க வேண்டும் எனவும் அந்த மக்களின் நீதிக்காகவும் விடுதலைக்காகவும் தொடர்ந்து உழைப்போம் என உறுதியெடுத்தனர். 



No comments