இரணதீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன்

இரணதீவில் ஒருவரைடத்திற்கும் மேலாக தமது தீவை விடுவித்து கடற்படையை வெளியேற கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் இன்றைய தினம் சென்று பார்வையிட்டிருந்தார்.
இந்த சந்திப்பில் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், மற்றும் உறுப்பினர்களான கஜதீபன், ஐங்கரனேசன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் மக்கள் மதகுருமார்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களால் மகஜர் ஒன்றும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

No comments