ஆலயத்தினுள் பாதணி கழற்ற மறுத்த சுவாமி!


இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தனது காலணியை கழற்றி ஆலயத்தில் வழிபடமறுத்ததையடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

வடமராட்சிப்பகுதிக்கு விஜயம் செய்த அவர் வரலாற்றுப்புகழ் மிக்க வல்லிபுர ஆலயத்திற்கும் வழிபாட்டிற்கு சென்றிருந்தார்.அவரே இந்து கலாச்சார அமைச்சராகவும் இருந்திருந்த நிலையினில் ஆலய நிர்வாகம் பூரண கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்க காத்திருந்தது.

ஆனாலும் ஆலயத்தினுள் தனது மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் பாதணியை அணிந்தவாறு அமைச்சர் உள்நுழைய முற்பட நிர்வாகமோ பாதணியை கழற்றி உள்ளே வர அழைத்தது.


எனினும் அமைச்சர் இதற்கு மறுதலிக்க இழுபறிகளால் கோபமுற்ற அமைச்சர் ஆலயத்தினுள் வராது வெளியே பாதணியுடன் நின்று வணங்கி வெளியேறியிருந்தார்.   

No comments