தொடங்கிவிட்டது தமிழ்நாட்டில் இனப்படுகொலை - கவிபாஸ்கர்

தொடங்கிவிட்டது தமிழ்நாட்டில் இனப்படுகொலை…     
தூத்துக்குடியை துவக்கால் துவைத்ததே
இனப்படுகொலையின்..
தொடக்கம்!..
ஜெனரல் டயரின்..
தோட்டாக்களை...
ஜார்ஜ்கோட்டையிலிருந்து..
அனில் அகர்வால்..
அடியாட்கள் ஏவுகிறார்கள்!..
ஆலையை மூட...
போராடியவர்களை..
ஆளயே முடித்துவிட...
முடிவெடுத்தது..
அரச பயங்கரவாதம்!...
சுட்டுவிரல் நீட்டி...
சுடச் சொல்லி சொடக்கியது...
இந்திய ஓநாய்கள்!...
எதிர்கால சந்ததி...
உயிர் வாழ முழக்கமிட்டோரை...
எதிர் நின்று உயிர்பறிக்க..
வச்சிராவில் வந்தது...
காவலர்கள் இல்லை….
இரத்தக் காட்டேறிகள்!..திட்டமிட்டு.
சுட்டுவீழ்த்த கட்டளையிட்ட...
கருங்காலிகளை விட்டுவிடாது...
இன உணர்ச்சி!....
எட்டப்பர்களாய் திரியும்...
கறைவேட்டிகளை காரி உமிழ்ந்து அம்மணமாக்கிவிட்டது...
நிகழ்காலம்!...
உயிரைக்கொடுத்தேனும்..
ஆலையை மூடுவோம்”...
முழங்கிய மக்கள்!...
உயிரையே கொடுத்துவிட்டார்கள்!..
இரத்தப் பிசுபிசுப்போடு நின்று...
கதறுகிற எம்மக்களின் குரல்
ஸ்டெர்லைட் ஆலையை
சில்லுசில்லாக சிதைக்கும்!
திரேஸ்புரத்தில்
பற்றி எரியும் பெருநெருப்பு
அதிகார அரம்பர்களை
அடியோடு பொசுக்கும்!
தொடங்கியது தமிழ்நாட்டில்
இனப்படுகொலை…
அடுத்தடுத்த ஆட்டத்திற்கும்
குறிபார்த்து நாள் குறிக்கிறது
இந்தியா!
ஸ்டெர்லைட்டால்;
அணு உலையால்
புற்றுநோய் கொடுத்து…
மீத்தேனால்
ஹைட்ரோ கார்பனால்
நிலம், நீர், காற்றைக் கெடுத்து…
நியூட்ரினோவால்;
சாகர் மாலாவால்
சமாதி எழுப்பி..
உயிர்க்குடிக்கும்
ஒத்திகைக்கு
அணிவகுத்து வருகிறது
பாரதமாதா படைகள்!
சாவையும்; சவாலையும்
எதிர்கொள்வோம்..!
நாளையும்
சனநாயகம்
செத்துக்கிடக்கலாம்..
ஆனால்..
இனப்படுகொலையில்
உயிர்த்தெழும்!
இன விடுதலை..

- கவிபாஸ்கர்

No comments