கிளிநொச்சிக்குப்புதிய பார்: யாழில் மது ஒழிப்பாம்?


இனஅழிப்பின் உச்ச கொலைகள் அரங்கேறிய மே மாதத்தில் வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போமென தமிழரசுக்கட்சி களமிறங்கியுள்ளது. யாழ்ப்பாணம் மையப் பேருந்து நிலையத்துக்கு முன்னால் இது தொடர்பான விழிப்புணர்வுச் செயற்திட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதல்வர் ஆர்னோல்ட், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக அமைப்பினர் கலந்து கொண்டனர்.

“வன்முறையை ஒழிப்போம், இளைஞரை வளர்ப்போம், சமூக சீரழிவை ஒழிப்போம், நற் சமுதாயத்தை உருவாக்குவோம்” என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட கிழக்கு சமூக நல்லிணக்கத்திற்கான அமைப்பு இந்தச் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.


நேற்றுமுன்தினம் இதே தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கிளிநொச்சி மாவட்டத்திற்கு மதுபான சாலை தேவையென குரல் எழுப்பியுள்ள நிலையில் வன்முறையை ஒழிப்போம், இளைஞரை வளர்ப்போம், சமூக சீரழிவை ஒழிப்போம், நற் சமுதாயத்தை உருவாக்குவோமென சுமந்திரன் அணி யாழில் களமிறங்கியுள்ளது.

No comments