கூட்டமைப்பு இரணைதீவு விஜயம்: மகனுடன் மாவை!


இலங்கை தமிழரசுக்கட்சி நேற்று இரணைதீவிற்கு மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற சுற்றுலாவினில் அவரது மகனான சேனாதிராசா கலைஅமுதனும் உள்ளடங்கியிருந்தார்.அடுத்துவரும் மாகாணசபை தேர்தலில் துண்டுவிரித்து கூட்டமைப்பில் காத்திருக்கும் அகிலன் எனும் நபர் பகிர்ந்த புகைப்படங்கள் மூலம் இது அம்பலமாகியுள்ளது.

தனது அரசியல் வாரிசாக தற்போது தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மகனான சேனாதிராசா கலைஅமுதனை களமிறக்கியுள்ளார்.
நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் வலி.வடக்கு பிரதேசசபையில் தனது மகனான  கலைஅமுதனை இந்தியாவிலிருந்து தருவித்து மாவை சேனாதிராசா தேர்தல் களத்தில் இறக்கியிருந்தார்.


அத்துடன் முதன்மை வேட்பாளராக தனது உதவியாளரான சோ.சுகிர்தனை அவர் களமிறக்கி மகனிற்காக பிரச்சாரம் செய்வித்துமிருந்தார்.அத்துடன் அரசிடமிருந்து பெறப்பட்ட இரண்டு கோடி முழுவதும் வலி.வடக்கில் தனது மகனின் வெற்றிக்காக செலவு செய்துமிருந்தார்.

இந்நிலையில் தற்போது தவிசாளராக உள்ள சோ.சுகிர்தன் அடுத்து மாகாணசபை தேர்தல் களமிறங்கவுள்ள நிலையில் தற்போது உறுப்பினராக உள்ள மகனை வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளராக்க அவர் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் மகனது அரசியல் நகர்வுகளை முன்னிறுத்தி மக்களை சந்திக்கவைக்க முயற்சிகளை அவர் ஆரம்பித்துள்ளார்.அதன் தொடர்ச்சியாகவே இரணைதீவு சுற்றுலாவிற்கு தனது மகன் சகிதம் மாவை பயணித்துள்ளார்.  

No comments