முன்னர் புலிவேட்டை:இப்பொழுது புனர்வாழ்வாம்!


2009 முன்னராக யாழப்பாணத்தில் இலங்கைப்படைகளுடன் இணைந்து மும்முரமாக புலிவேட்டையாடி ஈபிடிபி யாழ் மாநகரசபை உறுப்பினர் றீகன்  தற்போது புலிப்போராளிகளிற்கு புனர்வாழ்வளிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களும் தத்தமது பங்களிப்பை ஓரளவேனும் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் யாழ் மாநகர சபையின் முதல் அமர்வில் ஈபிடிபி மாநகரசபை உறுப்பினர் றீகன் கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்நிலையில் தொழில்வாய்ப்புக்கு தொழில் உபகரணங்கள் இன்றி தமது குடும்பத்தை கொண்டு செல்லமுடியாத நிலையில் வாழ்ந்துவந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கடற்றொழில் செய்வதற்கான பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்காக தனது இம்மாதக் கொடுப்பனவை பிரபல பணப்பறிப்பு சட்டத்தரணியும் மாநகரசபை உறுப்பினருமான றெமீடியஸ் வழங்கிவைத்துள்ளார்.

No comments