ரணிலிடம் முன்வைக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் தூக்கி வீசப்பட்டன!
அங்கு, வேலைவாய்ப்புக்காக வழங்கப்பட்ட சுய விபர கோவைகள் உள்ளடங்களாக பல கடிதங்கள் இவ்வாறு பரவி வீசப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது. பிரதமரின் கிளிநொச்சி விஜயத்தின் பின்னர் இவ்வாறு பல கோரிக்கைகள் அடங்கிய கடிதங்கள் வீசப்பட்டுள்ளதுடன், அதில் மீள்குடியேற்ற அமைச்சருக்கு வாழ்வாதாரம் கோரியும், தமது கல்வி தகமைக்கமைய வேலைகளை பெற்று தருமாறு கோரியும் மக்களால் வழங்கப்பட்ட கடிதங்களும் காணப்படுகின்றது. இந்நிலையில், தமது கோரிக்கைகளை அவர்கள் செவி சாய்க்காவிடினும் இவ்வாறு எமது கண் முன் கோரிக்கைகள் வீசப்பட்டுள்ளமை தொடர்பில் கவலை அடைவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


Post a Comment