ஈழ ஏதிலிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


இந்தியாவின் பெரம்பலூர் மாவட்டத்தில் 238 ஏதிலிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

2017 மற்றும் 18 ஆம் நிதியாண்டுகளின் வருவாய் மூலம் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை ஏதிலிகள் உள்ளிட்ட மேலும் பலருக்கு வழங்கப்படும் இந்த நலத்திட்ட உதவிகளுக்காக 153.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஏதிலிகளில் கணவனை இழந்த 13 குடும்பத் தலைவிகள், 20 முதியவர்கள் மற்றும் விசேட தேவை உடையவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments