இந்தோனேசியாவில் தேவாலயங்கள் மீது தற்கொலைத் தாக்குதல்கள்! 9 பேர் பலி!

இந்தோனேசியாவின் சுரபாயா நகரில் உள்ள மூன்று தேவாலயங்களில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துடன் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள சுரபயா அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். இந்நிலையில், அந்நகரில் உள்ள மூன்று முக்கிய தேவாலயங்களில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 2 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் கூறியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது யார்? என்பது தொடர்பான விசாரணையில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது. 

முதற்கட்டமாக உந்துருளியில் வந்த நபர் தாக்குதலை நடத்தியது சிசிரிவி கமராவில் பதிவு செய்யப்பட்ட காணொளி வெளியாகியுள்ளது.

No comments