அமைச்சரவை மாறினால் பிரச்சினைகள் தீரும்:சுமந்திரன்!


அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் தமிழ் மக்களது பிரச்சினைகளிற்கு தீர்வு கிடைத்துவிடுமென காத்திருப்பதாக தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் தனது வீட்டிற்கு ஊடகவியலாளர்களை இன்று வியாழக்கிழமை அழைத்துப்பேசிய அவர் 2015ம் ஆண்டின் முற்பகுதியில் அரசிற்கு ஒத்துழைக்காமை பற்றி சுட்டிக்காட்டிவந்த போதும் நல்லாட்சி ஆட்சிக்கு வந்ததால் தமது போராட்ட முனைப்பனை பிற்போட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


ஆனாலும் நல்லாட்சி அரசிற்கு வழங்கி வந்த கால அவகாசம் நீண்டுவிட்டதை புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்த அவர் தற்போதைய அமைச்சரவை மாற்றத்தின் பின்னராக தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

இதனால் அமைச்சரவை மாற்றத்தை தாங்கள் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதாக எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
இப்பத்திரிகையாளர் மாநாட்டில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் கே.துரைராஜசிங்கமும் பிரச்சன்னமாகியிருந்தார்.

No comments