மோடிக்கு கறுப்புக் கொடிகாட்ட அணிதிரளுங்கள் - வைகோ அழைப்பு

தமிழகத்துக்கு ஏப்ரல் 12-ந் தேதி வருகை தரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்ட தமிழக மக்கள் அனைவரும் கிளர்ந்து எழ வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகின்றன.

இந்நிலையில், ஏப்ரல் 12ம் தேதி ராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வர இருக்கும் மோடிக்கு எதிராக பெரிய அளவில் கறுப்புக்கொடி காட்ட தமிழக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

No comments