சீனக் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர்

சீனாவின் வடகிழக்கு துறைமுக நகரமான கிங்டாவோவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் பழுதுபார்க்கப்பட்டு வந்த சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும், ஐந்து பேரைக் காணவில்லை என்றும் அரசு ஊடகங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. 

உள்ளூர் நேரப்படி காலை சுமார் 11:15 மணியளவில், கப்பலில் இருந்த 42 பேருடன் தீப்பிடித்ததாகவும், பிற்பகல் 2:30 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாகவும் அரசு ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது.

அந்தக் கப்பல், லைபீரியக் கொடியின் கீழ் இயங்கும் 190 மீட்டர் (623 அடி) நீளமுள்ள 'ஓஷன் மெலடி' என்ற சரக்குக் கப்பல் என அடையாளம் காணப்பட்டதாக அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. 

காரணம் இன்னும் தெளிவாகவில்லை. 
தேடுதல் மற்றும் மீட்புப் பணியை மேற்கொள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கியமான அறிவுறுத்தல்களை பிறப்பித்ததோடு, இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளார் என சின்ஹுவா மேலும் தெரிவித்தது. 

அனைத்துப் பிராந்தியங்களும் சம்பந்தப்பட்ட துறைகளும் இந்தச் சம்பவத்திலிருந்து ஆழமான பாடங்களைக் கற்றுக்கொண்டு, அனைத்து வகையான தீ விபத்து அபாயங்களையும் முழுமையாக விசாரித்துச் சரிசெய்ய வேண்டும் என்று ஷி கூறினார்.

தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை. 

உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனங்களில் ஒன்றான, சீனா அரசு கப்பல் கட்டும் கழகத்தின் (CSSC) ஒரு அங்கமான, கிங்டாவோவிலுள்ள பெய்ஹாய் கப்பல் கட்டும் நிறுவனத்தில் அந்தக் கப்பல் பழுதுபார்க்கப்பட்டு வந்தது.

No comments