வலி வடக்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுகிர்தன் தெரிவு

வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சோ. சுகிர்தன் 30 வாக்குகளால் சற்றுமுன்னர் தெரிவு செய்யப்பட்டார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்ப்பில் போட்டியிட்ட தா.நிகேதன் 6 வாக்குகளைப் பெற்றார்.

வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் புதிய தவிசாளர் தெரிவு செய்யப்பட்டார்.

No comments