கூட்டமைப்புக்கு எழுத்துமூலம் உறுதியளிப்பாரா ரணில்?


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள 10 நிபந்தனைகள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதில் இன்று வழங்கப்படும். அர­சி­யல் தீர்வு உள்­ளிட்ட பல்­வேறு கோரிக்­கை­கள் அடங்­கிய மனுவை பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நேற்று நேரில் முன்­வைத்­த­னர்.இந்­தக் கோரிக்­கை­க­ளுக்கு பிரதமர் ரணில் எழுத்­து­மூ­லம் பதில் வழங்­க­வேண்­டும் என்­றும் கோரி­னர். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற குழுக் கூட்­டம் நேற்று இடம்­பெற்­றது. இதன்­போது பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டன் பேச்சு நடத்­து­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து நாடா­ளு­மன்­றக் குழு­வி­னர், பிரதமர் ரணிலை நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத் தொகு­தி­யில் நேற்று மாலை சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­னர். அர­சி­யல் தீர்வு, காணி விடு­விப்பு, அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை, காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ரம் உள்­ளிட்ட தமி­ழர் தரப்­பி­னர் உட­னடி மற்­றும் நீண்­ட­கா­லப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்­டும் என்று கோரிக்கை முன்­வைத்­த­னர். கூட்­ட­மைப்­பி­ன­ரின் கோரிக்­கை­ளைப் பார்­வை­யிட்ட பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவற்றை நிறை­வேற்­ற­லாம் என்று வாய்­மூ­லம் பதி­ல­ளித்­துள்­ளார். அவற்றை எழுத்­தில் வழங்­க ­வேண்­டும் என்று கூட்­ட­மைப்­பி­னர் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர். அத்­தோடு தான் நிறை­வேற்­று­வ­தாக ஏற்­றுக்­கொண்ட வாக்­கு­று­தி­களை நாடா­ளு­மன்­றத்­தில் தான் உரை­யாற்­றும்­போது வெளிப்­ப­டை­யா­கவே குறிப்­பி­ட­ வேண்­டும் என்­றும் கூட்­ட­மைப்­பி­னர் வலி­யு­றுத்­தி­னார். ஆனால், அந்­தக் கோரிக்­கையை ஏற்­றுக்­கொள்ள பிரதமர் மறுத்­து­விட்­டார். தான் அவ்­வாறு செய்­தால் சிங்­கள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பல­ரி­ன­தும் கோபத்­துக்கு ஆளா­க­நே­ரி­டும் என்று அவர் அச்­சம் வெளி­யிட்­டார்.கூட்­ட­மைப்­பி­ன­ரின் கோரிக்­கைக்­கான பதிலை இன்று வழங்­கு­வ­தாக ரணில் கூறியுள்ளார்.

No comments