வென்றாலும் தோற்றாலும் முடியப் போகும் கூட்டு அரசின் ஆயுள்!


பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கவுக்கு எதிரான நம்­பிக்­கை­யில்­லா தீர்­மா­னம் வெற்றி பெற்­றா­லும், தோல்­வி­ய­டைந்­தா­லும், கூட்டு அரசாங்கம் இன்று இரவு 9.30 மணி­யு­டன் முடிவுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்­ளூ­ராட்­சித் தேர்­த­ல் முடி­வு­கள் வெளி­வந்த ஒரு வாரத்­துக்­குள்­ளேயே கூட்டு அரசுக்குள் உச்­சக்­கட்ட முரண்­பாடு எழுந்­தது. பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதவி வில­க­ வேண்­டும் என்று, ஜனாதிபதி மைத்­தி­ரி­பால உள்­ளிட்ட சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர் வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­னர். இந்த விவ­கா­ரத்­தில் மேற்­கு­லக இரா­ஜ­தந்­தி­ரி­கள் தலை­யிட்­டதை தொடர்ந்து நிலமை சுமு­க­மா­னது. அமைச்­ச­ரவை மறு­சீ­ர­மைப்பு இடம்­பெ­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் அமைச்­சுப் பத­வி­கள் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டது. சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைச்­சுப் பத­வி­கள் மாற்­றப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்ட போதும் இடம்­பெ­ற­வில்லை. இவற்­றுக்­கி­டையே மகிந்த அணி­யால் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வரப்­பட்­டது. அதை­ய­டுத்து பிரதமர் பத­வி­யி­லி­ருந்து ரணில் வில­க­வேண்­டும் என்று, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர் குரல் எழுப்­பத் தொடங்­கி­னர். இந்த நிலை­யில் ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் மீது இன்று வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இந்த வாக்­கெ­டுப்­பில் ரணில் வெற்றி பெற்­றா­லும், கூட்டு அரசு நீடிக்­காது என்று கொழும்பு அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிரதமர் பத­வி­யி­லி­ருந்து வில­கா­வி­டின், கூட்டு அர­சி­லி­ருந்து இன்று இரவு 9.30 மணிக்கு சுதந்­தி­ரக் கட்சி வெளி­யே­றும் என்று அந்­தக் கட்சி முன்­னரே அறி­வித்­தி­ருந்­தது. பிரதமர் ரணி­லு­ட­னான நேற்­றைய சந்­திப்­பும் திருப்­தி­ய­ளிக்­காத நிலை­யில், சுதந்­தி­ரக் கட்சி கூட்டு அர­சி­லி­ருந்து வெளி­யே­றும் முடி­வில் உறு­தி­யாக உள்­ளது என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

No comments