சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்பிக்கையில்லாப் பிரே­ரணை கொண்டு வரு­வது தொடர்பில் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பல்வே­று­பட்ட கருத்­து­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர். எனினும் அது குறித்து கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்­தி­லேயே தீர்­மா­னிக்க முடியும் என  அவ்­வெ­திர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்த்தன தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்பு ஸ்ரீவ­ஜி­ரா­ஷர்ம பெளத்த நிலை­யத்தில் நடை­பெற்­றது. அந்நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கடந்த மூன்று ஆண்­டு­களில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தேசியப் பிரச்­சினை தொடர்பில் பேச­வில்லை. அவர் வடக்கு, கிழக்கிலுள்ள பிரச்­சினை குறித்தே கனவம் செலுத்­து­கிறார்.ஆகவே அவர் எதிர்க்­கட்சித் தலை­மைக்குப் பொருத்­த­மற்­றவர் எனக் குறிப்பிட்டுள்ளார் பந்துலக குணவர்த்தன.

No comments