காவல்துறையினர் மீதான தாக்குதல் சம்பவம்! ரஜினிகாந்த் கண்டனம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டி எதிர்ப்புத் தொிவித்து நேற்று அண்ணா சாலையில் போராட்டம் நடைபெற்றது

போராட்டத்தின் போது காவல்துறையினர் மீதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், காவல்துறையினர் தாக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கீச்சகப்பக்கத்தில் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

‘வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.’, என அவர் மேலும் கூறியுள்ளார்

No comments