தந்தை செல்வாவின் 41வது ஆண்டு யாழில் நினைவேந்தப்பட்டது

தந்தை செல்வாவின் 41வது ஆண்டு நினைவு நாள் யாழ்ப்பாணத்தில் நினைவேந்தப்பட்டது.


இன்று வியாழக்கிழமை முற்பகல் தந்தை செல்வா அவர்களின் நினைவுச் சதுக்கத்தில் மலர்மாலை அணிவித்து, நினைவுப் பேருரைகளுடன் நினைவேந்தப்பட்டது.

நிகழ்வில் தந்தை செல்வா அறங்காவலர் சபையின் தலைவர், தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாசன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ் மாநகர முதல்வர் ஆனோல்ட், இமானுவல் அடிகளார், சிவாஜிலிங்கம், விக்கரமபாகு கருணாரட்ண எனப் பலரும் கலந்துகொண்டனர்.

No comments