முல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி!

வற்றாப்பளை - கேப்பாபுலவு வீதியில், நேற்று (22) மாலை, தமிழ் இராணுவ சிப்பாய் ஒருவர் இனந்தெரியாதோரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

முல்லைத்தீவு - கேப்பாபுலவுப் பகுகுதியைச் சேர்ந்த, செந்தூரன் (வயது 28) என்பவரே, இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இவர், பொலன்னறுவையிலுள்ள படைமுகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாயென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த இராணுவ சிப்பாய், விடுமுறை நிமித்தம் வீட்டுக்கு வந்துகொண்டிருந்த போதே, இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த இராணுவ வீரர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments