இறால் வளர்ப்பு ; இல்மனைட் தொழிற்சாலை தடை



மட்டக்களப்பு - வாகரையில் அபிவிருத்தி எனும் போர்வையில் திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமையப் பெறுவதை முற்றாக தடை செய்யக்கோரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை (22) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய், சூழலை பாதிக்கும் இறால் வளர்ப்பு திட்டம் நமக்கு வேண்டாம், அகழாதே,அகழாதே,எம் மண்ணை அகழாதே, வெளியேறு வெளியேறு கொள்ளையர்களே வெளியேறு, இயற்கை வளங்களை அழிக்கும் செயல் திட்டங்கள் எமக்கு வேண்டாம்” உள்ளிட்ட பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


No comments