நாவாந்துறை தேவாலயத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி திறந்து வைப்பு

நாவாந்துறை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வடிவமைக்கப்பட்ட சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேவாலய சூழலில் 14 சிற்பங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. இவை புலம்பெயர்ந்து வாழும் ஒருவரின் நிதி அனுசரணையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒரு சில சிலைகளின் வேலைகள் முழுமையடைந்துள்ள நிலையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. ஏனையவையை விரைவில் மிகவும் அழகுற நேர்த்தியான முறையில் வர்ணம் பூசப்பட்டு வேலைகள் நிறைவடையவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.


No comments