வடமாகாணசபைக்குள் முதலமைச்சராக வருகிறார் டக்ளஸ்?

வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிட ஈபிடிபி ஒட்டுக்குழுவின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முடிவு செய்துள்ளாராம்.

வடக்கு மாகாணசபையின் ஆயுள் காலம் எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளது.
இந்நிலையிலேயே வடக்கு மாகாணசபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி ஆலோசித்து வருவதாக டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

மாகாணசபைகளின் ஊடாக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ள அவர் தனது கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக ஏன் நான் போட்டியிடக் கூடாது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments