நீரில் மூழ்கி படகு விபத்து: மாணவன் உயிரிழப்பு


கினிகத்தேனையில் களனி கங்கையில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மினுவாங்கொடயைச் சேர்ந்த 23 வயதுடைய மொரட்டுவ பல்கலைகழகத்தின் பொறியியல் பீட மாணவன் எனத் தெரிவிக்கப்பட்டது. பல்கலைகழகத்திலிருந்து தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்த போதே படகு நீரில் மூழ்கி உயிரிழந்தார் எனக் கூறப்பட்டது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.

No comments