வடமாகாணசபை தேர்தல் வருட இறுதியில்!

வடமாகாணசபைக்கான தேர்தல் இவ்வருட இறுதி அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. ஆறு மாகாண சபைகளிற்கான தேர்தல் இவ்வருடம் நிறைவடைவதற்குள் நடாத்த முடியமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தேரிவித்துள்ளார்.

சப்ரகமுவ, வட மத்திய, கிழக்கு ஆகிய மாகாண சபைகள் தற்பொழுது கலைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான ஆட்சிக் காலமும் நிறைவடையவுள்ளது.
இதன்படி, இவற்றுக்கான மாகாண சபைத் தேர்தல்களை எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலைப் பிற்போட்டு வருவது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் எனவும், இது தொடர்பில் மக்கள் மத்தியில் கருத்து மாற்றமொன்றை உருவாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்

No comments