நேபாளம், திபெத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் கிராமங்களை அழித்தது


நேபாளத்தில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் கிராமங்களை அடித்துச் சென்றதோடு, பாலங்களையும் சேதப்படுத்தியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

நேபாளத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்த நிலையில், எல்லையின் மறுபுறத்தில் உள்ள திபெத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் "பெரும் உயிரிழப்புகள்" ஏற்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடுமையாக உயிரிழப்புகள் அல்லது சொத்து இழப்புகள் ஏற்படலாம். ஆனால், தற்போதைக்கு என்னால் உறுதியாகக் கூற முடியாது என நேபாள பிராந்திய அதிகாரி நரேந்திர பரியார் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

நேபாளம், மலைப்பாங்கான ரசுவா பகுதிக்கு மீட்பு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, ஆனால் வெள்ள நீர் மட்டம் அதிகமாக இருந்ததால் ஹெலிகாப்டர்களால் தரையிறங்க முடியவில்லை.

மீட்புப் பணிகளுக்கு ராணுவமும் காவல்துறையும் உதவி வருவதாக நேபாள பிரதமர் பலேந்திர ஷா தெரிவித்தார்.

No comments